Monday, December 27, 2010

We need a revolution in the education system in India


சுதந்திரமான சிந்தனைக்கும் அறிவாற்றலுக்கும் தடையாக இருப்பது இன்றைய கல்வி முறை

மாணவனின் தேவைகளை நிறைவேற்றும் ஆசிரியர்கள் மட்டுமே என்றும் நம் மனதில் இடம் பெறுவார்கள். மாணவனின் தேவைகளை அறியாது, தம் அதிகாரத்தால் மாணவனை அடக்கி வைக்கும் ஆசிரியர்களை மாணவன் பிற்காலத்தில் ஒரு ஜெயில் வார்டனைப் போன்றே பார்க்கிறான்.

சுதந்திரமாக கற்றல் நடைபெற வேண்டும். ஒரு கட்டுக்குள் மாணவனை அடக்கி வெறும் தகவல்களை அள்ளித் தரும் ஒரு கூடமாக இருக்குமானால் , மாணவன் பள்ளியை ஒரு சிறை சாலையாகவே எண்ணி புறக்கணிக்க ஆரம்பிப்பான்.

"சுதந்திரமான சிந்தனைக்கும் , அறிவாற்றலுக்கும் தடையாக இருப்பது இன்றைய கல்வி முறை" -என்ற ரஸ்ஸல் கருத்து என்றும் உண்மையாகி விடாது , அனைத்து ஆசிரியர்களும் மாணவனின் தேவைகள் உணர்ந்து , சுதந்திரமான கற்றலை உருவாக்கவேண்டும்.

நான் உணர்ந்த மாதிரி என்று பிறர் உணர்வார்கள்...? கல்வியில் , கல்வி கற்று தரும் முறையில் மாற்றம் வர வேண்டும். கல்வி மதிப்பெண் உத்திகளை மறந்து உண்மையான மதிப்பிடல்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
We need a revolution in the education system in India


The Indian Education system is in great trouble. These are some of the faults I find in the current education system.


* Several children do not even get a basic elementary education.


* The rich and upper middle class in cities find decent quality private schools to send their children to. Even in these schools, getting a pass in the exams is the priority, not learning. Even these schools fail in teaching various arts, and in particular common sense to children.


* Both the private and government schools in smaller towns and villages are uniformly pathetic.


* Even if a student graduates from a higher secondary school, there are not enough colleges. The only hope left to most high school graduates is correspondence education. It is not clear to me whether one can be motivated enough to study through the correspondence course material sitting at home.


* Even if one graduates from college, the graduates are mostly unemployable, because of poor quality course material and teaching in the colleges.

Saturday, September 25, 2010

உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது vs Bible < > Quran

முதலாவதாக தகுதியான உடையாயிருக்கவேண்டும்:
உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது
 நிர்வாணத்தை காட்டும்படியாகவோ, ஒருவரை வசீகரம் அல்லது கவர்ச்சி செய்யும்படியோ இருக்கலாகாது. அது தீய நோக்கம், (நீதிமொழிகள் 24:9 தீயநோக்கம் பாவமாம்). உடையானது உடலுடன் ஒட்டிக்கொண்டு உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது. அதிக அளவில் பேன்ட், ஜீன்ஸ் இப்படி ஒட்டியவாறு பாகங்களைக் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக உடைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகும்:

உதாரணமாக நாம் அணியும் வேஷ்டி வெளிநாடுகளில் ஆணின் உடையல்ல. தாவணியும் பாவாடையும் வடநாட்டில் பெண்ணின் உடையுமல்ல. தமிழ்நாட்டின் உடை வேறு, காஷ்மீரின் உடை வேறு. எனவே நாம் வசிக்கும் இந்த எல்லைக்குள் நிதானிக்கவேண்டும். ஒரு நாட்டில் பேன்ட் பெண்ணின் உடை என்றால் அங்கு அவர்கள் அணியலாம். ரோமர் 14:13 ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இது மரணத்துக்கு ஏதுவான பாவம் அல்ல என்று எண்ணுகிறேன் (I யோவான். 5:16,17)

மூன்றாவதாக உடையானது செய்யும் தொழிலை சார்ந்தது:

நீதிமொழிகள் 7:10 அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள் என்று வாசிக்கிறோம். தற்போதும் நர்ஸ், தீயணைப்பவர், காவல்துறை என செய்யும் தொழிலுக்கு ஒரு உடை ஒழுங்கு உண்டு. ஐஸ் (பனிக்கட்டி) மலைகளுக்கு செல்லும்போது பாவாடை, சேலை அணிந்து சென்றால் நம் உடல் உறைந்து விடும். அங்கு அதற்குரிய உடையை அணியவேண்டும். அப்படியே விண்வெளிக்கும் ஒரு உடை உண்டு.
பெண்ணின் உடையை ஆண் (அல்லது ஆணின் உடையை பெண்) அணிந்தால் கிருமிகள் பரவலாம் என்ற காரணத்தினால்கூட தேவன் சொல்லியிருக்கலாம். ஆண் பெண் யார் என்ற குழப்பங்கள் வரலாம்.
thanx to -tamilbibleqanda.blogspot.com


Thursday, September 9, 2010

who is best friend ? vijayTv Bharathathil Dharmam




நட்பு  --(கவிஞர் கண்ணதாசன்)

"யாரோடு நீ பழக நினைக்கின்றாயோ அவனோடு நீ இனிமையாக பழக வேண்டும்.
கொஞ்ச காலத்திற்கு அதை நீ நட்பாக கருதக்கூடாது.
வெறும் பழக்கமாக தான் கருத வேண்டும். உனக்கு கஷ்டம் வந்தபொழுது அவன் கை கொடுத்தால்,
உன்னை பற்றி பிறர் தவறாக பேசும்போது அவன் தடுத்து பேசியதாக அறிந்தால், அவனை நீ நம்ப தொடங்கலாம். ஆகவே அவன் உன் மீது வைத்திருக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்க முடியும். நீ அழும்பொழுது அவனுக்கு அழுகை வருகிறது என்றால் அது தான் நட்பு"....
       

Monday, August 2, 2010

Nearly 50 percent of the world's hungry live in India

Nearly 50 percent of the world's hungry live in India, a low-income, food-deficit country.

Around 35 percent of India's population - 350 million - are considered food-insecure, consuming less than 80 percent of minimum energy requirements.

Nutritional and health indicators are extremely low. Nearly nine out of 10 pregnant women aged between 15 and 49 years suffer from malnutrition and anaemia.

Anaemia in pregnant women causes 20 percent of infant mortality. More than half of the children under five are moderately or severely malnourished, or suffer from stunting.
thanx........WORLD HEALTH ORG

Puthiya Thalaimurai weekly book

Puthiya Thalaimurai   weekly book புதிய தலைமுறை....
புதிய தலைமுறை வலை தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

பெருகி வரும் வலை தளங்களின் எண்ணிக்கையின் மத்தியில், புதிய தலைமுறையின் வருகைக்குக் காரணம் என்ன ? எதைச் சாதிக்க இந்த முயற்சி என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழலாம்.

வலை தளத்தின் பெயர் குறிப்பது போல, தமிழகத்தின் புதிய தலைமுறையின் முன்னேற்றத்திற்கு ஒரு உந்துகோலாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகவும் விளங்கும் நோக்கத்துடன் இவ்வலைத்தளம் மலர்ந்திருக்கிறது. உலகிலேயே இளைஞர்கள் அதிகம் நிறைந்த நாடு இந்தியா. நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் புதிய தலைமுறை இளைஞர்களுக்குச் சமூகம் சார்ந்த செய்திகளை எந்த சார்புமின்றி வழங்கவும், வளர்ச்சிக்கு வழிகாட்டவும், மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கவும், இவ்வலைத்தளம் விழையும்.

இந்தியா வல்லரசாக மாறவேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம், எல்லோரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும். எப்படி மாற்றம் ஏற்பட வேண்டும் என்னும் சிந்தனைகள் முதலில் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும். மனித நேயத்தை மீறி ஓங்கிவிட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும் சமூக நலத்தைச் சாய்த்து உயர்ந்துவிட்ட சாதிப்பற்றும், பொது நலத்தை பொசுக்கிவிட்டுப் பெருகியுள்ள சுயநலப் நோக்கும், மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

நாடு, சமூகம், சுற்றம் மட்டும் மாற வேண்டும் எண்ணாமல், ஒவ்வொரு தனி மனிதனும் தானாக மாறவேண்டும். தான் காண நினைக்கும் மாற்றத்தின் முதல்படியாக ஒவ்வொருவரும் மாற வேண்டும்,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எனப்படும் த மிழ்குடி இன்னும் தழைத்திருப்பது காலத்திற்கேற்ப மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புதியன புகுத்தி , பழையன கழித்ததால்தான். ஆற்றலையோ அறிவையோ விட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் இனமே தழைக்கும் என்பதை உணர்ந்து பின்பற்றியதால்தான்.

அப்படியொரு மாற்றத்தை இந்த நவீன யுகத்திலும் புதிய தலைமுறையினரிடம் புகுத்தி , மேலும் மாண்புடன் நம் நாடு உயர்ந்திட இந்த வலைத்தளம் செயல்படும்.

அம்முயற்சிக்கு நீங்கள் உறுதுணையாய் இருந்து,  உற்சாகப்படுத்துவீர்கள் என உங்களை நம்பி களத்தில் இறங்குகிறோம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, இனி ஒருவிதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம்.
 
thanx ....
Puthiya Thalaimurai   weekly book